நடந்து
வந்த
வழிகளிலெல்லாம்
சுமந்து
வந்தீரே
நடந்து வந்த வழிகளிலெல்லாம் சுமந்து வந்தீரே
நன்றியோடு உம்மை நான் துதிக்கிறேன் ஐயா
கடந்து வந்த பாதைகளில் கருத்தாய் காத்தீர்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா
உம்மை துதிக்கின்றேன் இயேசுவே
நன்றியோடு துதிக்கிறேன்
வேடன் கண்ணிக்கு விலக்கி காத்தீர்
பாழாக்கும் கொள்ளைநோய்;க்கு தப்புவித்தீர்
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்
பகலின் அம்புக்கும் பாது காத்தீர் - உம்மை
ஆயிரம் பதினாயிரம் எதிர்த்த போதும்;
சேதம் அணுகாமல் காத்துகொண்டீர்
பொல்லாப்பு நேராமல் வாதையணுகாமல்
சிறகுகளால் என்னை மறைத்து கொண்டீர் - உம்மை
பாதம் இடறாமல் ஏந்தி கொண்டீர்
தூதர்கள் சூழ என்னை காத்துகொண்டீர்
சிங்கத்தின்மேலே நடக்கசெய்தீர்
வலுசர்ப்பத்தை நான் மிதிக்கச்செய்தீர் - உம்மை